சவுதி அரேபிய மாகாணங்களில் ஒன்றான பாஹாவில் ஒரு வேர் ஹவுஸில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென்று பரவி மூன்று கொடவுன்களை நாசப்படுத்தியது.
தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. தீப்பிடித்த சில நிமிடங்களிலேயே இளவரசர் மிஸாரி பின் சவுத் (பாஹா மாகாணத்தின் கவர்னராகவும் உள்ளார்) சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.
மூன்று கொடவுன்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்ததால் அந்த இடமே பெரும் புகை மூட்டமாக இருந்தது. அதையும் பொருட்படுத்தாது தனது முகத்தை துணியால் மூடிக் கொண்டு அந்த இடத்தை அடைந்து
காயமடைந்த நபர்களை உடன் மருத்துவ மனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். தீப்பிடித்ததற்கான உண்மையான காரணத்தை உடன் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மீட்பு பணிகள் சிறப்பாக நடக்கிறதா என்று அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக