Breaking News
recent

செலவுக்கு பணம் அனுப்பிய சவுதி அரேபிய நபரும்.. இந்திய நடிகையாக காட்டிக்கொண்ட பெண்ணும்!


இந்­திய நடிகை போன்று தன்னைக் காட்­டிக்­கொண்டு, சவூதி அரே­பி­யாவைச் சேர்ந்த ஒரு­வரை திரு­மணம் செய்­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்து அவ­ரி­ட­மி­ருந்து பெருந்­தொகை பணம் பெற்ற மொரோக்கோ பெண் ­ஒருவர் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.
மொரோக்­கோவைச் சேர்ந்த இந்த பெண் பேஸ்புக் இணை­யத்­த­ளத்தில் தன்னை ஒரு இந்­திய நடிகை போன்று காட்­டிக்­கொண்டார். சவூதி அரே­பிய நபர் ஒருவர், இந்த பெண்னுடன் அறி­மு­க­மானார். இரு­வ­ருக்கும் இடை­யிலான பல வார கால உரை­யா­டலின் பின்னர் இந்த பெண்னுக்கு சவூதி அரே­பிய நபர் செலவுக்கு பணம் அனுப்பத் தொடங்­கினார்.
அந்த பெண்ணை திரு­மணம் செய்­து­ கொள்­வ­தற்கு சவூதி அரே­பிய நபர் விரும்­பினார். இதற்கு உட­ன­டி­யாக சம்­மதிதுள்ளார்.
மொரோக்­கோ­வுக்கு வந்து தனது தாயாரை சந்­திக்­கு­மாறும் சவூதி அரே­பிய நபரை அப்பெண் கோரியுள்ளார்.
அதை­ய­டுத்து மொரோக்­கோ­வுக்கு சென்ற சவூதி நபர், அந்­நாட்டின் விமான நிலை­யத்தில் தனது காத­லிக்­காக காத்­தி­ருந்தார். ஆனால், அந்த பெண் வர­வில்லை. அவ­ருக்கு தொலை­பேசி அழைப்பு மேற்­கொண்ட முயற்சி பலனளிக்­க­வில்லை.
பல மணித்­தி­யா­லங்கள் காத்­தி­ருந்த பின்­னரே ஒரு மோசடிப் பெண்­ணிடம் தான் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டதை சவூதி நபர் உணர்ந்துள்ளார்.
அதன்பின் பொலி­ஸா­ரிடம் முறைப்­பாடு செய்யப்பட்டதையடுத்து மேற் படி பெண்னையும் அவரின் தாயாரும் மொரோக்கோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.