இந்திய நடிகை போன்று தன்னைக் காட்டிக்கொண்டு, சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வதாக வாக்குறுதியளித்து அவரிடமிருந்து பெருந்தொகை பணம் பெற்ற மொரோக்கோ பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரோக்கோவைச் சேர்ந்த இந்த பெண் பேஸ்புக் இணையத்தளத்தில் தன்னை ஒரு இந்திய நடிகை போன்று காட்டிக்கொண்டார். சவூதி அரேபிய நபர் ஒருவர், இந்த பெண்னுடன் அறிமுகமானார். இருவருக்கும் இடையிலான பல வார கால உரையாடலின் பின்னர் இந்த பெண்னுக்கு சவூதி அரேபிய நபர் செலவுக்கு பணம் அனுப்பத் தொடங்கினார்.
அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு சவூதி அரேபிய நபர் விரும்பினார். இதற்கு உடனடியாக சம்மதிதுள்ளார்.
மொரோக்கோவுக்கு வந்து தனது தாயாரை சந்திக்குமாறும் சவூதி அரேபிய நபரை அப்பெண் கோரியுள்ளார்.
அதையடுத்து மொரோக்கோவுக்கு சென்ற சவூதி நபர், அந்நாட்டின் விமான நிலையத்தில் தனது காதலிக்காக காத்திருந்தார். ஆனால், அந்த பெண் வரவில்லை. அவருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
பல மணித்தியாலங்கள் காத்திருந்த பின்னரே ஒரு மோசடிப் பெண்ணிடம் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை சவூதி நபர் உணர்ந்துள்ளார்.
அதன்பின் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து மேற் படி பெண்னையும் அவரின் தாயாரும் மொரோக்கோ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக