உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் இந்துத்துவா தீவிரவாத குழுக்களால் ஜோடிக்கப்பட்டு நாடு முழுவதும் பரப்புரைச் செய்யப்பட்ட ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரின் துயரம் தொடருகிறது.
இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டாக்டர் நவாபின் மனைவி ஃபரீதா கூறுகையில்,’எனது 3 வயது மகன் அயனிடம், தந்தை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி வருகிறேன்’ என்றார்.அயான் வீட்டில் விளையாடிக்கொண்டிருக்கிறான்.அரு கே சில பெண்கள் குர்ஆன் ஓதிக்கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதம் 3-ஆம் தேதியில் இருந்து தொடரும் தங்களுக்கு இழைக்கப்படும் அநியாயம் முடிவுக்கு வரவேண்டும் என்பதே அவர்களது பிரார்த்தனையாகும்.
75 வயதில் மகன் சனாவுல்லாஹ் மற்றும் மருமகளுக்காக ஜாமீன் எடுப்பதற்காக அலையவேண்டிய சூழல் ஏற்படும் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்று பெரியவர் பகாவுல்லாஹ் கூறுகிறார்.அவருக்கு இரண்டு பெண்கள் உள்படஐந்து பிள்ளைகள் உள்ளனர்.மகள் நிஷாதின் திருமணம் நின்றுபோனதால் துயரத்தில் ஆழ்ந்துள்ளார் அவரது தாயார் வாஸிலா.நிஷாதை கைதுச் செய்ததை தொடர்ந்து மணமகன் வீட்டார் பின்வாங்கிவிட்டனர்.
ஒரு லட்சம் ரூபாயை திருமணத்திற்காக குடும்பத்தினர் செலவழித்துள்ளனர்.ஆகஸ்ட் 7-ஆம் தேதி நிஷாத் கைதுச் செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெறாவிட்டாலும் நிஷாத் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.’முஸ்லிம் கள் கூறுவதை யாரும் கேட்பதில்லை’ என்று கைதுச் செய்யப்பட்ட கலீமின் குடுபத்தினர் தெரிவித்தனர்.
நவாப், சனாவுல்லாஹ், நிஷாத், கலீம் ஆகியோர் உத்தரபிரதேசத்தில் அபாண்டமான ‘லவ் ஜிஹாத்’ வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரில் அடங்குவர்.கூட்டு பாலியல் வன்கொடுமைச் செய்ததாகவும், மதம் மாற்றியதாகவும் குற்றம் சாட்டி மீரட்டில் மதரஸாவில் ஆசிரியையாக பணியாற்றிய இளம்பெண் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இவர்களையெல்லாம் போலீஸ் கைதுச் செய்தது.
ஆனால், இம்மாதம் 12-ஆம் தேதி அபாண்டமான ‘லவ் ஜிஹாத்’ புகாரை அளித்த இளம்பெண் பெற்றோரின் வற்புறுத்தலால் புகார் அளித்ததாக காவல் நிலையம் சென்று வாக்குமூலம் அளித்திருந்தார்.
பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவாரத்தினர் இளம்பெண்ணின் தந்தைக்கு பணம் அளித்த வீடியோ காட்சிகளும் வெளியாகின.கலீமுடன் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே சென்றதாக அந்த இளம்பெண் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.இந்த வாக்குமூலம் உள்ளிட்ட இவ்வழக்கு வருகிற 28-ஆம் தேதி நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரவிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக