Breaking News
recent

துபாயில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கோப்பை: குவைத் அணி சாம்பியன்!


ஆசிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நடத்திய ஏ.எஃப்.சி 2014 கோப்பைகான இறுதி போட்டி கடந்த சனி கிழமை (18) துபாயில் நடைப்பெற்றது. 
 
இதில் ஈராக் நாட்டின் இர்பில் கால்பந்து சங்கமும், குவைத் நாட்டின் முன்னணியில் இருக்கும் கத்ஸியா கால்பந்து சங்கமும் நேருக்கு நேர்
மோதின.
இதில் 4-2 என்ற கணக்கில்  குவைத் அணி, ஈராக் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.
 
குவைத்தின் கத்ஸியா கால்பந்து சங்கத்திற்கு அரபு நாடுகளில் பரந்த ரசிகர் வட்டமும் உள்ளது.
 
இதற்கு குவைத் நாட்டின் நாடளுமன்றமான மஜ்லிஸ் அல் உம்மாவில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று (19) பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
 
இதே போல் கடந்த ஆண்டு 2013  இறுதி போட்டியில் குவைத் கத்ஸியா அணி தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.