Breaking News
recent

துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவன அறிமுக நிகழ்ச்சி : இந்திய தூதர் பங்கேற்பு !



துபாயில் இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனம் குறித்த அறிமுக நிகழ்ச்சி 20.10.2014 திங்கட்கிழமை மாலை ஒபிராய் ஹோட்டலில் நடைபெற்றது.

வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் பி.எஸ். ஜெயக்குமார் தலைமை வகித்தார்.


 அவர் தனது உரையில் இந்திய ரியல் எஸ்டேட் குறித்த பல்வேறு தகவல்களையும் தற்போதைய அரசு மேற்கொண்டு வரும் நிலைப்பாடு குறித்தும் விவரித்தார்.

வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் தலைமை செயல் அலுவலர் ராகுல் சபர்வால் முன்னிலை வகித்தார்.

அமீரகத்துக்கான இந்திய தூதர் டி.பி. சீதாராம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில் பொதுவாக ரியல் எஸ்டேட் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்த்து வருவதாகவும், வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷனின் சிறப்பான பணிகள் குறித்து அறிந்து இந்நிகழ்வில் பங்கேற்பதாக தெரிவித்தார்.

வேல்யூ அண்ட் பட்ஜெட் ஹவுஸிங் கார்ப்பரேஷன் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

நிகழ்வில் அசட் வேல்யூ ரியல் எஸ்டேட் புரோக்கர்ஸ் நிறுவனத்தின் ஆரிஃப் புஹாரி, அப்துல் ஹக்கீம், ஜிதேந்திரா பணிக்கர், அப்துல் காதர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.




VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.