ஹஜ் கடமையின் ஓர் அம்சமான மினாவில் கல்லெறியும் நிகழ்வுக்காக தற்பொழுது புதிய ஜம்ரத் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. “இப்பாலம் ஒரு மணித்தியாலத்துக்கு ஐந்து இலட்சம் மக்களைக் உள்ளடக்கக் கூடியது” என இளவரசர் மன்சூர் பின் மிடெப் தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த ஜம்ரத் பாலமானது, மணிக்கு 3 இலட்சம் மக்களைக் உள்ளடக்கக்கூடியதாக இருந்தது. எனினும் அவ்வசதி போதாமையாகவே இருந்து வந்தது. இதன் காரணமாக இப்பாலத்தை மேலதிக வசதிகளுடன் புதிதாக அமைத்துள்ளோம். 4.2 பில்லியன் சவுதி ரியால் செலவில் இப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக”வும் இளவரசர் மன்சூர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக