உலகின் மிக உயர்ந்த கொடிக் கம்பத்தில் சவூதி அரேபியாவின் தேசியக் கொடி பறக்கவுள்ளது.
வரும் 23-செப்டம்பர் 2014 செவ்வாய்க்கிழமை சவூதி தேசிய தினத்தையொட்டி சவூதியின் பெரும் நிறுவனங்களில் ஒன்றான அப்துல் லத்தீப் ஜமீல் நிறுவன குழுமம் (ALJCI) இக்கொடிக்கம்பத்தை சவூதி அரேபியாவிற்காக நிறுவியுள்ளது.
கொடியை முறையாக ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி வரும் செவ்வாய்க்கிழமை சவூதி தேசிய தினத்தில் நடைபெறவுள்ளது.
இந்த கொடிக்கம்பம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறவுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ALJCI மேலாளர் பாதாவூத், "இதனை நாங்கள் கின்னஸ் சாதனைக்காக நிறுவவில்லை. சவூதி மக்களுக்காக இதனை நாங்கள் நிறுவியுள்ளோம்" என்றார்.
உலகின் மிக உயரமான இந்த கொடிக்கம்பம் 170 மீட்டர் உயர அளவைக் கொண்டது. மேலும், இதில் ஏற்றப்படவுள்ள கொடி 570 கிலோ எடை கொண்டது. இதுவே உலகின் மிக அதிக எடை கொண்ட கொடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக