Breaking News
recent

மோடியை கைவிட்டு விடாதீர்கள் - முஸ்லிம்களுக்கு சிவசேனா வேண்டுகோள்!




இந்திய முஸ்லிம்கள் மோடியைக் கைவிட்டு விடக் கூடாது என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி, முஸ்லிம்களைப் பற்றி உயர்வாக தெரிவித்தது சம்பந்தமாக எழுதப்பட்டுள்ளது. அதில் முஸ்லிம்களின் தேசப்பற்றினை உயர்வாக கூறிய மோடியை முஸ்லிம்கள் கைவிட்டு விடக் கூடாது என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மோடி இவ்வாறு கூறியிருப்பதால், ஹிந்துத்வா கொள்கையிலிருந்து அவர் விலகி விட்டதாக கூற முடியாது எனத் தெரிவித்துள்ள சாம்னா, முஸ்லிம்களில் சிலர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதால் ஒட்டு மொத்த சமுதாயமும் அதற்கு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
பால்தாக்கரேயும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிக்கும் இந்திய முஸ்லிம்களைத்தான் தேசவிரோதிகள் என்றுக் குறிப்பிட்டாரேத் தவிர, மற்ற முஸ்லிம்களின் மீது கோபம் கொள்ளவில்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்ட்ராவில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.