Breaking News
recent

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் துயர்துடைக்க நிவாரண நிதி தாரீர்! - தமுமுக வ.களத்தூர்.



பேரழகும் இளங்குளிரும் கொண்டாடி மகிழும் அழகிய காஷ்மீர், இப்போது பெரு வெள்ளத்தில் மூழ்கி சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இமயத்தின் அடிவாரத்தில், பார்புகழ் போற்றும் மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி நம் இந்திய சகோதர, சகோதரிகள் துன்பத்தில் மூழ்கியுள்ளனர். அவர்களுக்கு உதவிட இந்தியா வெங்கும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் நிவாரண நிதியை சேகரிக்கிறார்கள்.
 
1999ல் ஒரிஸ்ஸா புயல் நிவாரண நிதி, 2001ல் குஜராத் பூகம்ப நிவாரண நிதி என தேசிய பேரழிவுகளின் போது, நாட்டு மக்களுக்காக நிவாரண நிதி சேகரித்த தமுமுக இப்போது, ஜம்மு&காஷ்மீர் மக்களின் துயர் துடைக்கவும் வ.களத்தூர் மக்களை தேடி வருகிறது.
 
மனிதநேயம் கொண்டோரே... உங்கள் உள்ளங்களை திறந்து உதவிடுவீர்.
நீங்கள் செய்யும் தாராள பொருளுதவி பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் கண்ணீரைத் துடைப்பத்துடன், இறைவனின் அருளையும் பெற்றுத்தரும்.
தொடர்புக்கு:
                      தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்,
                            வ.களத்தூர் (கிளை),
                          பெரம்பலூர் மாவட்டம்.
                      9715355170, 8807339408, 7200757320.
 
நன்றி-கலீல்ரஹ்மான் வி.களத்தூர் 
 
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.