சவூதி அரேபியா, தம்மாமில் உள்ள அல்-பிலாத் மாலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
சனிக்கிழமை காலையில் நடைபெற்ற இத்தீவிபத்தில் அல்-பிலாத் மாலில் இருந்த நெஸ்டோ சூப்பர் மார்க்கெட்டின் 30,000 சதுர மீட்டர் கொண்ட தரைத்தளம் உட்பட பெரும்பாலான பகுதிகளில் தீ பரவியுள்ளது.
தீயணைப்புத்துறையின் 20 அணியினர் கடுமையான போராட்டத்திற்குப் பின் தீயை அணைத்துள்ளனர். இத்தீவிபத்தில் 6 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேற்று காலையில் இரு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பலியான இருவரும் உள்ளூர் அதிகாரிகள் எனத் தெரியவந்துள்ளது. மின்சார வயர்களில் ஏற்பட்ட குறைபாடே தீ விபத்திற்கான காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக