Breaking News
recent

கேரளாவில் இருந்து பிரான்சுக்கு மூளை மூலம் தகவல் பரிமாற்றம்!



அறிவியல் அதியசம் ஒன்று தற்போது உண்மையில் நடந்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து ஒரு மனிதன் மூளையில் அனுப்பிய `ஹோலா’ மற்றும் ‘சியோ’ என்ற இரண்டு வார்த்தைகள் பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள மற்றொரு மனிதன் மூளை அவரது இரண்டு வாழ்த்துக்களை பெற்றது. 

கைகள் இல்லை, பேச்சும் இல்லை, எந்த தட்டச்சும் இல்லை, எந்த முகபாவங்கள் இல்லாமல் அனுப்பிய இந்த தகவல் அறிவியலில் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் இந்த கண்டுபிடிப்புகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு பார்சிலோனா பல்கலைக்கழகம், ஹார்வர்டு மருத்துவ பள்ளி கடந்த வாரம் ஓர் ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது. மூளை தூண்டுதல் உபகரணங்கள் மற்றும் ரோபாட்டிக்ஸ் செய்யும் மூன்று நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர். 

கேரள நபர் ஒரு மடிக்கணினியில் பொருத்தப்பட்ட ஒரு அமைப்பு மூளையில் சிறிய மின்சாரத்தை அளவிடும். அவ்வாறு செய்ய சிறிய மின் அமைப்பு மிகவும் இறுக்கமான தொப்பி அணிந்து போல உச்சந்தலையில் மீது பொருத்தப்படுகிறது. இதன் மூலம் தகவல் பரிமாற்றப்படுகிறது. இந்த செட் அப் மூளை கணினி இடைமுகம் என்று அழைக்கப்படுகிறது.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.