Breaking News
recent

பாதுகாப்பு கோரும் திருப்பூர் ஸ்ரீ நகர் இஸ்லாமியர்கள்!



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் அளித்த மனுக்களை ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பெற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு அளிக்க வேண்டும்:

திருப்பூர், ஸ்ரீ நகரில் மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மசூதி கட்டி, கடந்த 22 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சில நபர்கள், இஸ்லாமியர்கள் யாரும் ஸ்ரீ நகர் பகுதியில் இருக்கக்கூடாது 

என்று மிரட்டி வருகின்றனர். மேலும், வாடகைக்கு குடியிருந்து வந்த இஸ்லாமிய மக்களை, வீட்டு உரிமையாளர்களிடம் கூறி காலி செய்ய வைத்துவிட்டார்கள். இதேபோன்ற சம்பவம் மீண்டும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அளிப்பதுடன், 

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, மஸ்ஜிதே இ.மதீனா அஹ்லுஸ் சுன்னத் நிர்வாகிகள் ஆட்சியர் கு.கோவிந்தராஜிடம் மனு அளித்தனர்.
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.