ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா
குற்றவாளி என தீர்ப்பு இன்று வெளியான நிலையில், தமிழகத்தில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சென்னை ஹஜ் கமிட்டியிலிருந்து விமான நிலையத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் பயணித்த பேருந்து மீது வன்முறை வெறியாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதில் பேருந்து சேதமடைந்து, கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.
எனினும் யாத்ரீகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைவரும் பத்திரமாக விமான நிலையம் வந்தடைந்து விமானத்தில் மக்காவிற்கு பயணித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக