நாட்டை இந்து தேசமாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றுவார் என்ற கோவா அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியின் வெற்றி குறித்து கோவா சட்டசபையில் பேசிய அம்மாநில அமைச்சர் தீபக் தவாலிக்கர், ''நாட்டை இந்து தேசமாக நரேந்திர மோடி மாற்றுவார். இந்தியாவை இந்து நாடாக்கும் வகையில் சீரிய திட்டங்களை அவர் உருவாக்குவார்.
நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியின் வெற்றி குறித்து கோவா சட்டசபையில் பேசிய அம்மாநில அமைச்சர் தீபக் தவாலிக்கர், ''நாட்டை இந்து தேசமாக நரேந்திர மோடி மாற்றுவார். இந்தியாவை இந்து நாடாக்கும் வகையில் சீரிய திட்டங்களை அவர் உருவாக்குவார்.
என்னுடைய இந்த விருபத்தை நிறைவேற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவார்'' என்றார்.
அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஏற்கனவே, அமைச்சர் தீபக் தாவலிக்கரின் சகோதரர், கோவாவிலுள்ள கடற்கரையில் பிகினி உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, அமைச்சர் தீபக் தாவலிக்கரின் சகோதரர், கோவாவிலுள்ள கடற்கரையில் பிகினி உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக