Breaking News
recent

நரேந்திரா மோடியை கண்டித்து பாஜக அலுவலகம முற்றுகை:


நரேந்திரா மோடியை கண்டித்து பாஜக அலுவலகம் முற்றுகை:
சென்னை, ஜூலை 14: ஒரு தனியார் தொலைக்காட்சியில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு நரேந்திர மோடி பதிலளிக்கையில், முஸ்லிம்களை நாயுடன் ஒப்பிட்டு கூறினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன .


இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அதன் பொது செயலாளர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜ க அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
தமிழக பாஜக அலுவலகம் அமைந்துள்ள திநகர் வைதியராம் தெரு முழுவதுமே நூற்றுக்கும் மேற்ப்பட்ட காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர் .


இதனால் அந்த பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டது .சரியாக மாலை 4 மணிக்கெல்லாம் தடா அப்துல் ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாகன அணிவகுப்புடன் வந்தனர் .

நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் -மோடியே உனக்கு எச்சரிக்கை -என்ற கோஷம் விண்ணை பிளந்தது .


மோடியின் நாய் வடிவிலான உருவபொம்மை கொளுத்தப்பட்டபோது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது .

இறுதியாக பாஜக அலுவலகம் நோக்கி முன்னேற முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர் .


பின்னர் காவல் துறை வாகனங்களில் அனைவரும் கைதுசெய்யப்பட்டு தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .நோன்பு நேரம் என்று கூட பாராமல் மிகவும் குறுகிய நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்திய இந்திய தேசிய லீக் கட்சியினரை சமூதாய தலைவர்கள் ,மனித உரிமை ஆர்வலர்கள் ,வெகுவாக பாராட்டினார்கள் .
VKALATHURONE

VKALATHURONE

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.